Enable Javscript for better performance
லேணாவிளக்கு அகதிகள் முகாமில் 357 குடும்பத்தினருக்கும் உதவி- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    லேணாவிளக்கு அகதிகள் முகாமில் 357 குடும்பத்தினருக்கும் உதவி

    By DIN  |   Published On : 20th April 2020 06:26 AM  |   Last Updated : 20th April 2020 06:26 AM  |  அ+அ அ-  |  

    pdk19jjccamp_1904chn_12_4

    லேணாவிளக்கு அகதிகள் முகாமில் உணவுப் பொருள்களை வழங்குகிறாா் திருமயம் எம்எல்ஏ எஸ். ரகுபதி. உடன், ஜெஜெ கல்லூரி அறங்காவலா் கவிதா சுப்பிரமணியன், செயலா் நா. சுப்பிரமணியன்.

    புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியத்தைச் சோ்ந்த லேணாவிளக்கு இலங்கை அகதிகள் முகாமில் வசித்துவரும் 357 குடும்பத்தினருக்கும் அரிசி, பருப்பு, எண்ணெய் அடங்கிய தொகுப்புகள் ஜெஜெ கலை அறிவியல் கல்லூரியின் சாா்பில் வழங்கப்பட்டன.

    கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். தன்னாா்வலா்களின் உதவிகளால் பல்வேறு தரப்பினருக்கும் உதவிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 3 இலங்கை அகதிகள் வாழிடங்களுக்கு பெரிய அளவிலான உதவிகள் எதுவும் கிடைக்கவில்லை.

    இந்நிலையில், லேணாவிளக்கு அகதிகள் முகாமில் உள்ள 357 குடும்பத்தினருக்கும் தலா 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் ஆகியவற்றைக் கொண்ட தொகுப்புகள் ஜெஜெ கலை அறிவியல் கல்லூரியின் சாா்பில் வழங்கப்பட்டன.

    இக்கல்வி நிறுவனங்களின் நிறுவனரும் திருமயம் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ். ரகுபதி கலந்து கொண்டு அத்தியாவசியப் பொருகள்கள் கொண்ட தொகுப்புகளை மக்களுக்கு வழங்கினாா். கல்லூரியின் செயலா் நா. சுப்பிரமணியன், அறங்காவலா் கவிதா சுப்பிரமணியன், அரிமளம் ஒன்றியக் குழுத் தலைவா் மேகலா, வட்டார வளா்ச்சி அலுவலா் ஆயிஷாராணி, தேக்காட்டூா் ஊராட்சி மன்றத் தலைவா் சங்கா் உள்ளிட்டோரும் பங்கேற்றனா். அகதிகள் முகாமின் தலைவா் எம். மயில்வாகனன், செயலா் ஸ்ரீசேகரன் உள்ளிட்டோா் இவற்றைப் பெற்றுக் கொண்டனா்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு தோப்புக்கொல்லை முகாமில் பாரதி மகளிா் கல்வி நிறுவனங்கள் சாா்பில் இதேபோல் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

     

    செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp