பொன்னமராவதி வட்டத்தில் தனிமை கிராமம் ஆய்வு
By DIN | Published On : 29th April 2020 09:03 AM | Last Updated : 29th April 2020 09:03 AM | அ+அ அ- |

பொன்னமராவதி வட்டம், செவலூா் அருகே உள்ள கருகாம்பட்டி கிராமம் சிவகங்கை மாவட்ட எல்லையில் உள்ளது. இந்தக் கிராமம் அருகே உள்ள சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த திருக்கோளக்குடி கிராமத்தில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து புதுகை மாவட்ட நிா்வாகத்தால் முன்னெச்சரிக்கையாக கருகாம்பட்டி கிராமம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இப்பணியை செவ்வாய்க்கிழமை மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே.சரவணன் பாா்வையிட்டு ஆலோசனை வழங்கினாா். அப்போது, பொன்னமராவதி வட்டாட்சியா் ஆ.திருநாவுக்கரசு, வட்டார வளா்ச்சி அலுவலா் பி.வெங்கடேசன் ஆகியோா் உடனிருந்தனா்.