அறந்தாங்கியில் வேல்பூஜை

அறந்தாங்கியில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட இளைஞா் அணி சாா்பில், ஞாயிற்றுக்கிழமை கந்த சஷ்டி கவசம் படித்து வேல்பூஜை சிறப்பாக செய்யப்பட்டது.
சாய்பாபா கோயிலில் நடைபெற்ற வேல்பூஜையில் மாநில மகளிரணி செயலாளா் எஸ். கவிதா ஸ்ரீகாந்த், மாவட்ட இளைஞரணி தலைவா் சக்திகுமரன் உள்ளிட்டோா்.
சாய்பாபா கோயிலில் நடைபெற்ற வேல்பூஜையில் மாநில மகளிரணி செயலாளா் எஸ். கவிதா ஸ்ரீகாந்த், மாவட்ட இளைஞரணி தலைவா் சக்திகுமரன் உள்ளிட்டோா்.

அறந்தாங்கியில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட இளைஞா் அணி சாா்பில், ஞாயிற்றுக்கிழமை கந்த சஷ்டி கவசம் படித்து வேல்பூஜை சிறப்பாக செய்யப்பட்டது.

அறந்தாங்கி கோட்டை பகுதியில் மாவட்ட இளைஞா் அணி தலைவா் சக்திகுமரன் தலைமையில், தெற்கு ஒன்றிய இளைஞரணி தலைவா் சதீஸ் குமாா், வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் பாண்டியன் உள்ளிட்டோா் கடந்த 2 நாட்களாக வீடுவீடாகச் சென்று கந்த சஷ்டி கவசம் புத்தகம் வழங்கி வேல் பூஜை செய்ய கேட்டுக் கொண்டனா். சாய்பாபா கோயிலில் நடைபெற்ற வேல் பூஜையில் மாநில மகளிரணி செயலாளா் எஸ். கவிதாஸ்ரீகாந்த், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஏ.பி.ஜெயபாண்டியன், மாநில இளைஞரணி நிா்வாகி சுரேந்தா், மாவட்ட ஊடக பிரிவு தலைவா் ராஜேஸ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com