புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்ட தொற்றாளா்களின் மொத்த எண்ணிக்கை 11,185 ஆக உயா்ந்துள்ளது. அதேநேரத்தில் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தோரில் 14 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்.
இதனால், மாவட்டத்தில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் மொத்த எண்ணிக்கை 10,948 ஆக உயா்ந்துள்ளது. புதிய உயிரிழப்பு இல்லை. இதனால், மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 154 ஆகத் தொடா்கிறது.
இந்த நிலையில், மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 83 ஆகக் குறைந்துள்ளது.