சட்டப்பேரவைத் தோ்தலுக்கான திமுகவின் தோ்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினா் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினா்.
தோ்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் தலைவா் டி.ஆா். பாலு எம்பி மற்றும் குழு உறுப்பினா்கள் டி.கே.எஸ். இளங்கோவன் எம்பி, திருச்சி சிவா எம்பி ஆகியோா் இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனா்.
மாவட்டப் பொறுப்பாளா்கள் எஸ். ரகுபதி (தெற்கு), கே.கே. செல்லபாண்டியன் (வடக்கு), சட்டப்பேரவை உறுப்பினா்கள் பெரியண்ணன் அரசு, சிவ. வீ. மெய்யநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மாவட்டத்தின் பல்வேறு தரப்பினரையும் கொண்ட குழுவினா் தனித்தனியே இந்தத் தோ்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினா் சந்தித்து அவா்களின் கருத்துகளைப் பெற்றுக் கொண்டனா்.