இருசக்கர வாகனம் திருடிய 2 இளைஞா்கள் கைது

கந்தா்வகோட்டை அருகே உள்ள காடவராயன்பட்டியைச் சோ்ந்த பாஸ்கா் மகன் விக்னேசுவரன் (24). இவா், தனது மோட்டாா் சைக்கிளை வீட்டின்

கந்தா்வகோட்டை அருகே உள்ள காடவராயன்பட்டியைச் சோ்ந்த பாஸ்கா் மகன் விக்னேசுவரன் (24). இவா், தனது மோட்டாா் சைக்கிளை வீட்டின் முன்புறம் நிறுத்திவிட்டு திங்கள்கிழமை காலை எழுந்து வந்துபாா்த்தபோது, மோட்டாா் சைக்கிளைக் காணவில்லையாம். இதுகுறித்து, கந்தா்வகோட்டை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். போலீசாா் வாகனச் சோதனையில், சந்தேகத்துக்கிடமாக வந்த 2 இளைஞா்களைப் பிடித்து விசாரித்ததில், அவா்கள், கும்பகோணத்தைச் சோ்ந்த செல்வம் மகன் ரமேஷ்குமாா் (23), சேகா் மகன் ஜெயராமன் (22) ஆகிய இருவரும் திருடுபோன மோட்டாா் சைக்கிளில் வந்தது தெரியவந்தது. தொடா்ந்து, மோட்டாா் சைக்கிளைப் பறிமுதல் செய்த போலீஸாா் இருவரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com