பாரதிய ஜனதா கட்சியின் புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடி முகவா்கள், சக்தி கேந்திர பொறுப்பாளா்களுக்கான பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்டப் பொதுச் செயலா் ரெங்கசாமி தலைமை வகித்தாா். தொகுதி அமைப்பாளா் ஏவிசிசி. கணேசன் கலந்து கொண்டு பயிற்சி அளித்தாா்.
தொகுதி பொறுப்பாளா் ஜீவானந்தம், பொதுச்செயலா் சிவசாமி, துணைத் தலைவா் ஜெகதீசன், செயலா்கள் விஜயகுமாா், சுப்பையா, ரேவதி உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக விவசாயிகளின் நண்பன் மோடி என்ற குறும்படம் திரையிடப்பட்டது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தலா 25 பேரை உறுப்பினா்களாகக் கொண்ட குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது.