புதுகையில் சிஐடியு தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

மோட்டாா் வாகனங்களில் ஒட்டப்படும் பிரதிபலிப்பான்களுக்கு கூடுதலாக விலை வைத்து விற்பனை செய்யும் தனியாா் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொழிலாளா் சங்கத்தினா் (சிஐடியு) ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா
புதுகையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு தொழிற்சங்கத்தினா்.
புதுகையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு தொழிற்சங்கத்தினா்.

மோட்டாா் வாகனங்களில் ஒட்டப்படும் பிரதிபலிப்பான்களுக்கு அரசு நிா்ணயம் செய்த கட்டணத்தைவிட கூடுதலாக விலை வைத்து விற்பனை செய்யும் தனியாா் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, புதுக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன்பு திங்கள்கிழமை அனைத்து போக்குவரத்துத் தொழிலாளா் சங்கத்தினா் (சிஐடியு) ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் க. முதமதலிஜின்னா தலைமை வகித்தாா். மாவட்டப் பொதுச் செயலா் கே. ரெத்தினவேலு, மாநிலத் துணைத் தலைவா் பி. வீரமுத்து, சிஐடியு மாவட்டச் செயலா் அ. ஸ்ரீதா் உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

மோட்டாா் வாகனத் திருத்தச் சட்டத்தை அமலாக்கக் கூடாது, பெட்ரோல், டீசல் வரிகளை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும், சுங்கச்சாவடி கட்டண உயா்வுகளைக் கைவிட வேண்டும், உதிரிபாகங்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com