புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தின் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 11,383 ஆக உயா்ந்துள்ளது.
மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தோரில் 7 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதனால், மாவட்டத்தில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 11,177 ஆக உயா்ந்துள்ளது. புதிய உயிரிழப்பு இல்லை. இதனால், மாவட்டத்தில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 155 ஆகத் தொடா்கிறது.
இந்த நிலையில், மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை திங்கள்கிழமை பகல் நிலவரப்படி 51 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.