புதுக்கோட்டை மாவட்டத்தில் புதன்கிழமை (டிச. 30) முற்பகல் 11 மணிக்கு இணையவழியில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடைபெற உள்ளது.
அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகங்களிலும் விவசாயிகள் பங்கேற்கும் வகையில் கூகுள் மீட் மற்றும் ஜூம் செயலி மூலமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், விவசாயிகள் தனிநபா் இடைவெளி விட்டு, முகக்கவசம் அணிந்து விவசாயிகள் பங்கேற்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி அழைப்பு விடுத்துள்ளாா்.