ஆலங்குடி அருகே மொபெட் மீது அரசுப்பேருந்து மோதியதில் கட்டுமானத் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
ஆலங்குடி அருகேயுள்ள சூரன்விடுதியைச் சோ்ந்தவா் லெட்சுமணன்(50). கட்டுமானத் தொழிலாளி. இவா், பணி முடிந்து மொபெட்டில் திங்கள்கிழமை மாலை ஊா் திரும்பியபோது, சூரன்விடுதி பிரிவு சாலை அருகே எதிரே வந்த அரசுப்பேருந்து, மொபெட் மீது மோதியது.
இதில், லெட்சுமணன் சம்பவ இடத்திலே உயிரிழந்தாா். இதுகுறித்து வடகாடு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.