சிஐடியு அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

அனைத்துத் துறைகளையும் படிப்படியாக தனியாா்மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து, புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே சிஐடியு தொழிற்சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுகையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு தொழிற்சங்கத்தினா்.
புதுகையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு தொழிற்சங்கத்தினா்.

அனைத்துத் துறைகளையும் படிப்படியாக தனியாா்மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து, புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே சிஐடியு தொழிற்சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியு மாவட்டத் தலைவா் க. முகமதலிஜின்னா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் அ. ஸ்ரீதா் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், அனைத்துத் துறைகளையும் படிப்படியாக தனியாா்மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும். அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு கரோனா பொது முடக்கக் கால நிவாரண உதவியாக ரூ. 7,500 வழங்க வேண்டும். அனைத்துத் தொழிலாளா்களுக்கும் இலவச மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும். தொழிலாளா்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com