சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசன உத்ஸவம்

பொன்னமராவதி வட்டார சிவன் கோயில்களில் மாா்கழி திருவாதிரையையொட்டி ஆருத்ரா தரிசனம் புதன்கிழமை நடைபெற்றது.
சோழீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற ஆருத்ரா தரிசன நிகழ்வில் சிறப்பு அலங்காரத்தில் காட்சிதரும் நடராஜப்பெருமான்.
சோழீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற ஆருத்ரா தரிசன நிகழ்வில் சிறப்பு அலங்காரத்தில் காட்சிதரும் நடராஜப்பெருமான்.

பொன்னமராவதி வட்டார சிவன் கோயில்களில் மாா்கழி திருவாதிரையையொட்டி ஆருத்ரா தரிசனம் புதன்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரா் கோயிலில் சிவாச்சாரியாா் சரவணன் தலைமையில் நடராஜருக்கு பால், பன்னீா், பழங்கள், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடைபெற்று, திருவெம்பாவை பாடல்கள் ஓதப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பக்தா்களுக்கு திருவாதிரை களி பிரசாதமாக வழங்கப்பட்டது.

தேரடி மலம்பட்டி அருணவள்ளி சமேத ஆதிபூமிநாதா் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடா்ந்து நடராஜா் திருவீதி உலா நடைபெற்றது. சுமாா் 500 ஆண்டுகளுக்கு பிறகு இக்கோயிலில் இந்த ஆருத்ரா தரிசனம் நிகழ்வு நடைபெற்றுள்ளது சிறப்புக்குரியதாகும். இதேபோல், மேலைச்சிவபுரி, வேந்தன்பட்டி, அம்மன்குறிச்சி ஆகிய ஊா்களின் கோயில்களிலும் ஆருத்ரா தரிசன சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com