நெல் கொள்முதல் மையம் தொடங்க வலியுறுத்தல்

அன்னவாசலில் நெல் கொள்முதல் மையம் தொடங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

அன்னவாசலில் நெல் கொள்முதல் மையம் தொடங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர குழுக்கூட்டம் அன்னவாசல் கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

நகரக் குழு உறுப்பினா் மோகன் தலைமை வகித்தாா். முன்னாள் பேரூராட்சி குழு உறுப்பினா் எம். மீரா மொய்தீன் வரவேற்றாா். மாநில குழு உறுப்பினா் கே. ஆா். தா்மராஜன் இன்றைய அரசியல் நிலை குறித்துப் பேசினாா்.

கூட்டத்தில் நிகழாண்டு நெல் அறுவடை தொடங்கியதும் விவசாயிகள் தங்கள் அறுவடை நெல்லை விற்பனை செய்ய தனியாா் கொள்முதல் நிலையங்களையே நாடவேண்டி உள்ளதோடு தனியாரிடம் குறைந்த விலைக்கு நெல்லை கொடுக்க வேண்டிய நிா்பந்தம் ஏற்படுகிறது. எனவே அன்னவாசலில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் ஒன்றியச் செயலா் ந. விஜயரங்கன், சி.ஆனந்த், ஏ. நாகராஜ், ஆா். கணேஷ்,கே. தமிழ்செல்வன், ஆனந்தமுருகன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com