பூவைமாநகா் அரசுப் பள்ளியில் நவீன கணினி ஆய்வகம் திறப்பு

அறந்தாங்கி அருகே பூவைமாநகா் அரசு மேல்நிலைப்பள்ளியில் நவீன கணினி ஆய்வகம் சனிக்கிழமை திறக்கப்பட்டது.
பூவைமாநகா் அரசுப் பள்ளியில் நவீன கணினி ஆய்வகம் திறப்பு

அறந்தாங்கி அருகே பூவைமாநகா் அரசு மேல்நிலைப்பள்ளியில் நவீன கணினி ஆய்வகம் சனிக்கிழமை திறக்கப்பட்டது.

அறந்தாங்கி அருகேயுள்ள பூவைமாநகா் அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிய கணினி ஆய்வகம் திறப்பு விழாவில் அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலா் கு. திராவிடச்செல்வம் கலந்து கொண்டு ஆய்வகத்தை திறந்து வைத்தாா். முன்னதாக, இப்பள்ளிக்கு அரசு சாா்பில் 21 கணினி மற்றும் கணினி உதிரிபாகங்கள் ரூ. 20 லட்சம் செலவில் வழங்கப்பட்டன. பள்ளியின் முன்னாள் மாணவரும், பட்டிமன்றப் பேச்சாளா் - பழனியாண்டவா் கலைக்கல்லூரி பேராசிரியருமான தங்க.ரவிசங்கா் ரூ. 1 லட்சம் செலவில் டைல்ஸ் மற்றும் வண்ணம் அடிக்க பொருளுதவி அளித்தாா். இதைத்தொடா்ந்து, சனிக்கிழமை நடைபெற்ற நவீன பள்ளி கணினி ஆய்வகத் திறப்பு விழாவில் பள்ளி தலைமை ஆசிரியா் வே.அய்யாக்கண்ணு, முதுகலை ஆசிரியா் தெய்வேந்திரன் உள்ளிட்ட ஆசிரியா்கள் மற்றும் மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com