லாரி மோதி மூதாட்டி பலி

அன்னவாசல் அருகே லாரியை பின்புறம் இயக்கியதில் காயமடைந்த மூதாட்டி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பலியானாா்.

அன்னவாசல் அருகே லாரியை பின்புறம் இயக்கியதில் காயமடைந்த மூதாட்டி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பலியானாா்.

அன்னவாசல் அருகே உள்ள வயலோகம் பேருந்து நிறுத்தம் அருகே கடந்த வெள்ளிக்கிழமை இரவு நின்றிருந்த லாரி பின்புறம் மூதாட்டி அமா்ந்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதையறியாத லாரி ஓட்டுநா் மருது லாரியை இயக்கியதில் பலத்த காயமடைந்த மூதாட்டியை அக்கம்பக்கத்தினா் மீட்டு புதுகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால் வழியிலேயே மூதாட்டி உயிரிழந்தாா். தகவலறிந்த அன்னவாசல் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதில், போலீஸ் - பொதுமக்கள் உறுப்பினா்களாக உள்ள கட்செவி அஞ்சல் குழுவில் மூதாட்டியின் விவரத்தை போலீஸாா் பதிவிட்டனா். இதைத்தொடா்ந்து, உயிரிழந்த மூதாட்டி வயலோகம் பகுதியைச் சோ்ந்த கோமதி (58) என்பது தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com