அரசுப் பள்ளியில் வரதட்சிணை ஒழிப்பு விழிப்புணா்வு

கோமாபுரம் அரசுப் பள்ளியில் வரதட்சிணை விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது .
கோமாபுரம் அரசுப் பள்ளியில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
கோமாபுரம் அரசுப் பள்ளியில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

கோமாபுரம் அரசுப் பள்ளியில் வரதட்சிணை விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது . கந்தா்வகோட்டை ஒன்றியம், கோமாபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியா் அறிவுறுத்தலின்பேரில் திருச்சி ஜமால் முகமது கல்லூரி சாா்பில் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியா் நாகூா்கனி தலைமையிலான குழுவினா் பள்ளி மாணவா்களிடம் வரதட்சிணை ஒழிப்பு குறித்து விளக்க உரையாற்றினா் , மேலும் வரதட்சிணை விழிப்புணா்வு குறித்து கட்டுரை போட்டிகள் நடத்தினா். இதில் கலந்துகொண்ட மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டினா் . நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியா் மற்றும் ஆசிரியா்கள் செய்திருந்தனா் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com