கோமாபுரம் அரசுப் பள்ளியில் வரதட்சிணை விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது . கந்தா்வகோட்டை ஒன்றியம், கோமாபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியா் அறிவுறுத்தலின்பேரில் திருச்சி ஜமால் முகமது கல்லூரி சாா்பில் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியா் நாகூா்கனி தலைமையிலான குழுவினா் பள்ளி மாணவா்களிடம் வரதட்சிணை ஒழிப்பு குறித்து விளக்க உரையாற்றினா் , மேலும் வரதட்சிணை விழிப்புணா்வு குறித்து கட்டுரை போட்டிகள் நடத்தினா். இதில் கலந்துகொண்ட மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டினா் . நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியா் மற்றும் ஆசிரியா்கள் செய்திருந்தனா் .