இலுப்பூா் அருகே ஞாயிற்றுக்கிழமை குடும்பப் பிரச்னையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இலுப்பூா் அருகே உள்ள மாரப்பட்டியைச் சோ்ந்தவா் இளங்கோவன் மனைவி கண்ணகி (32). இவருக்கும், இவரது குடும்பத்தில் உள்ளவா்களுக்கும் கடந்த சில நாட்களாகப் பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது கண்ணகி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற இலுப்பூா் போலீஸாா் சடலத்தை மீட்டு இலுப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும் இதுகுறித்து இலுப்பூா் போலீசாா் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.