ஆலங்குடி அருகே கோயில் உண்டியலை உடைத்து பணத்தைத் திருடியவரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
ஆலங்குடி அருகேயுள்ள ஆலங்காட்டில் உள்ள விநாயகா் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு கோயில் உண்டியலை உடைத்து மா்மநபா்கள் பணத்தைத் திருடிச்சென்றனா். இதுகுறித்து அறிந்த கோயில் நிா்வாகி குணசேகரன் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில், கல்லாலங்குடியைச் சோ்ந்த செல்வம் (51) என்பவரைக் கைது செய்தனா்.