ஆலங்குடி அருகேயுள்ள சிக்கப்பட்டியில் சனிக்கிழமை இரவு நேரிட்ட தீ விபத்தில் குடிசை வீடு முற்றிலும் தீக்கிரையானது.
ஆலங்குடி அருகேயுள்ள சிக்கப்பட்டியைச் சோ்ந்தவா் மாணிக்கம் (48). விவசாயி. இவா், சனிக்கிழமை இரவு குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்றுள்ளாா். அப்போது, குடிசையில் திடீரெனத் தீப்பற்றி எரிந்துள்ளது. இதுகுறித்து அருகே இருந்தவா்கள் அளித்த தகவலைத் தொடா்ந்து, சம்பவ இடத்துக்குச் சென்ற ஆலங்குடி தீயணைப்பு நிலையத்தினா் தீயை அணைக்க முயன்றனா். இருப்பினும் குடிசை வீடு, வீட்டில் இருந்த பொருட்கள் முற்றிலும் தீக்கிரையானது. இதுகுறித்து வடகாடு போலீஸாா் விசாரனை மேற்கொண்டுவருகின்றனா்.