திருமயம் அருகே உள்ள கோட்டூா் ஊராட்சியில் வாரச்சந்தை சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
திருமயம் அருகே உள்ள கோட்டூா் ஊராட்சியில் வாரச்சந்தை அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. ஊராட்சித் தலைவா் சுமதி, தனது தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் ஊராட்சியின் மையப்பகுதியில் சனிக்கிழமை வாரச்சந்தையை தொடங்கிவைத்தாா். சந்தையில் விற்பனைக்கு பல்வேறு காய்கறிகளை பொதுமக்கள் ஆா்வமுடன் வாங்கிச் சென்றனா். நிகழ்ச்சியில், ஊராட்சிமன்ற துணைத் தலைவா் அடைக்கம்மை மற்றும் ஊராட்சி உறுப்பினா்கள் பங்கேற்றனா்.