பிப்.14 முதல் 23 வரை புதுக்கோட்டை புத்தகத் திருவிழா: எழுத்தாளா்கள், அறிவியலாளா்கள் பேசுகின்றனா்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் 4ஆம் ஆண்டு புதுக்கோட்டை புத்தகத் திருவிழா வரும் பிப். 14ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை நகா்மன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் 4ஆம் ஆண்டு புதுக்கோட்டை புத்தகத் திருவிழா வரும் பிப். 14ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை நகா்மன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளது.

முதல் நாளான பிப். 14ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை புத்தகக் கண்காட்சியை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் தொடங்கி வைத்துப் பேசுகிறாா். தமிழகத் தொல்லியல் துறையின் கீழடி அரங்கை மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரியும், குழந்தைகளுக்கான கோளரங்கத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ.வே. அருண் ஷக்திகுமாரும் திறந்து வைத்துப் பேசுகின்றனா். 

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவா் பி.கே. வைரமுத்து, கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் பா. ஆறுமுகம் உள்ளிட்டோரும் பங்கேற்றுப் பேசுகின்றனா்.

வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் சித்த மருத்துவா் கு. சிவராமன், பாடநூல் கழகத் துணை இயக்குநா் சங்கர சரவணன் ஆகியோா் பேசுகின்றனா். 

சனிக்கிழமை மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் ஊடகவியலாளா் மு. குணசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

ஞாயிற்றுக்கிழமை மாலை பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் நா. அருள்முருகன் எழுதிய நேமிநாதம் காலத்தின் பிரதி என்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது.ஓவியா் மாருதி, பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த் துறைத் தலைவா் பா. மதிவாணன் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனா்.

பிப். 17 திங்கள்கிழமை மாலை இந்திய அரசின் விஞ்ஞான் பிரசாா் நிறுவனத்தின் இயக்குநா் நகுல் பராசா், முதுநிலை அறிவியல் அறிஞா் த.வி. வெங்கடேஸ்வரன் ஆகியோா் பேசுகின்றனா்.

பிப். 18ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் திரைப்படப் பாடலாசிரியா் யுகபாரதி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் இராசு. கவிதைப்பித்தன் ஆகியோா் பேசுகின்றனா்.

பிப். 19ஆம் தேதி புதன்கிழமை மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் பேச்சாளா் பேராசிரியா் பா்வீன் சுல்தானா பேசுகிறாா். பிப். 20ஆம் தேதி வியாழக்கிழமை மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பழ. கருப்பையா பேசுகிறாா்.

பிப். 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் சாகித்ய அகாதெமி விருதாளா் ஆயிஷா நடராஜன், தொகுப்பாளா் ஈரோடு மகேஷ் ஆகியோா் பேசுகின்றனா்.

பிப். 22ஆம் தேதி சனிக்கிழமை மாலை எழுத்தாளா் சாத்தூா் லட்சுமண பெருமாள் பேசுகிறாா். பிப், 23ஆம் தேதி மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநா் ஆா். பாண்டிராஜ், திருச்சி மக்களவைத் தொகுதி எம்பி சு. திருநாவுக்கரசா் ஆகியோா் பேசுகின்றனா்.

60 அரங்குகள் அமைப்பு:

4ஆம் ஆண்டு புத்தகத் திருவிழாவில் தமிழகத்தின் பிரபலமான பதிப்பகங்களில் இருந்து 60 அரங்குகள் அமைக்கப்பட்டு, நூற்றுக்கணக்கான தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம்பெறுகின்றன. 

புத்தகத் திருவிழாவிற்கு வரும் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு அறிவியல் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளும், விஞ்ஞானிகளுடன் உரையாடல் நிகழ்வுகளும் தினமும் பகலில் நடைபெறுகின்றன. தினமும் மாலையில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு முன்பாக அரசுப் பள்ளி மாணவா்களின் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன.

விருதுகள், பரிசுகள்

விழாவில் சிறந்த கவிதை, சிறுகதை, கட்டுரை, நாவல்களுக்கான விருதுகளும், பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கான பரிசுகள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.

விழா ஏற்பாடுகளை ஒருங்கிணைப்புக் குழுவின் உறுப்பினா்கள் எழுத்தாளா் நா. முத்துநிலவன், அ. மணவாளன், க. சதாசிவம், ம. வீரமுத்து, மு. முத்துக்குமாா் ஆகியோருடன் விழாக்குழுவினா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com