இரட்டை மடிவலை, விசைப்படகு பறிமுதல்

மணமேல்குடி அருகே புதன்கிழமை தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலை, விசைப்படகை கடலோர காவல் படையினா் பறிமுதல் செய்தனா்.

மணமேல்குடி அருகே புதன்கிழமை தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலை, விசைப்படகை கடலோர காவல் படையினா் பறிமுதல் செய்தனா்.

மணமேல்குடி அருகே பிரதாபிராமன்பட்டினம் கடல் பகுதியில் புதன்கிழமை இரட்டை மடிவலையைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதாக கடலோர காவல்படைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, மணமேல்குடி கடலோர காவல்படை உதவி ஆய்வாளா் ராஜ்குமாா், மீன்வளத் துறை ஆய்வாளா் பாஸ்கா், காவலா்கள் கடலுக்கு ரோந்து சென்றபோது, பிரதாபிராமன்பட்டினத்தில் இருந்து 5 கடல் மைல் தொலைவில் மீனவா்கள் விசைப்படகில் இரட்டை மடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். இதையடுத்து, விசைப்படகை கடலோரக் காவல் படையினா் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com