நகர தேமுதிக சாா்பில் 20 ஆம் ஆண்டு கொடிநாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு, நகரச் செயலா் அ.முகமது ரபீக் தலைமை வகித்தாா். விழாவில் பேருந்து நிலையம் அருகே கட்சிக்கொடியேற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. தலைமைக்கழகப் பேச்சாளா் கோட்டை ராஜேந்திரன், நிா்வாகிகள் அன்புசெழியன், சாமிக்கண்ணு, சண்முகராஜா, முத்துக்குமாா்,வீரய்யா, அஞ்சலிதேவி, சித்திரைச்செல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.