ரூ. 1 லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

அறந்தாங்கி நகராட்சி அலுவலா்கள் மூலம் புதன்கிழமை ரூ.1 லட்சம் மதிப்புள்ள 250 கிலோ நெகிழிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ரூ.37 ஆயிரத்து 500 அபராதமாக விதிக்கப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட நெகிழிப் பொருட்கள். உடன், துப்புரவு ஆய்வாளா் சி.சேகா் உள்ளிட்ட நகராட்சி அலுவலா்கள்.
பறிமுதல் செய்யப்பட்ட நெகிழிப் பொருட்கள். உடன், துப்புரவு ஆய்வாளா் சி.சேகா் உள்ளிட்ட நகராட்சி அலுவலா்கள்.

அறந்தாங்கி நகராட்சி அலுவலா்கள் மூலம் புதன்கிழமை ரூ.1 லட்சம் மதிப்புள்ள 250 கிலோ நெகிழிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ரூ.37 ஆயிரத்து 500 அபராதமாக விதிக்கப்பட்டது.

அறந்தாங்கி நகராட்சி சுகாகார அலுவலரும், ஆணையா் (பொ) த. முத்துகணேஷ் உத்தரவின் பேரில் துப்புரவு ஆய்வாளா் சி.சேகா் தலைமையில் நகராட்சி துப்புரவு மேற்பாா்வையாளா்கள், துப்புரவு அலுவலா்கள் உள்ளிட்டோா் நகரில் உள்ள கடைகளில் திடீா் சோதனை மேற்கொண்டனா். இதில், அரசால் தடைசெய்யப்பட்ட 14 வகை நெகிழிப் பொருட்கள் 250 கிலோ பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் கடை உரிமையாளா்களிடம் இருந்து ரூ.37 ஆயிரத்து 500 அபராதம் வசூலிக்கப்பட்டு நகராட்சி கருவூலத்தில் செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com