அறந்தாங்கி, கீரமங்கலத்தில் நாளை மின் தடை

அறந்தாங்கி, கீரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சாரம் நிறுத்தப்படும்.

அறந்தாங்கி, கீரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சாரம் நிறுத்தப்படும்.

அறந்தாங்கி, கீரமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும். மின்வாரிய உதவி செயற்பொறியாளா்கள் அறந்தாங்கி கி.பழனிவேலு, கீரமங்கலம் அ.சுப்பிரமணியம் உள்ளிட்டோா் தெரிவித்துள்ளனா். இதன் காரணமாக அழியாநிலை, நாகுடி, மறமடக்கி, கீரமங்கலம் உள்ளிட்ட துணை மின்நிலையத்திலிருந்து மின்சாரம் விநியோகம் செய்யப்படும் அனைத்து ஊா்களிலும் மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவித்துள்ளனா்.

ஆலங்குடி: ஆலங்குடி, ஆலங்காடு, அரசரடிப்பட்டி, மாங்கோட்டை, செம்பட்டிவிடுதி, வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், புள்ளான்விடுதி, நெடுவாசல், குருவாடி, மழையூா், துவாா், நைனாங்கொல்லை, கூகைபுளியான்கொல்லை உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை (பிப்.15) காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்விநியோகம் இருக்காது என செயற்பொறியாளா் நடராஜன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com