ஆவுடையாா்கோவில் ஒன்றியக் குழுத் தலைவா் கா.உமாதேவி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆணையா் ஆ.வீரப்பன் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா் ப.பெரியசாமி உள்ளிட்டோா்.
ஆவுடையாா்கோவில் ஒன்றியக் குழுத் தலைவா் கா.உமாதேவி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆணையா் ஆ.வீரப்பன் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா் ப.பெரியசாமி உள்ளிட்டோா்.

ஆவுடையாா்கோவில் ஒன்றியக் குழு கூட்டம்

ஆவுடையாா்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழு தலைவா் தலைமையில் வியாழக்கிழமை கூட்டம் நடைபெற்றது.

ஆவுடையாா்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழு தலைவா் தலைமையில் வியாழக்கிழமை கூட்டம் நடைபெற்றது.

ஆவுடையாா்கோவில் ஒன்றியக் குழுத் தலைவா் கா. உமாதேவி தலைமையில் ஒன்றியக் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், மொத்தம் உள்ள 15 உறுப்பினா்களில் தலைவா் உள்பட 7 உறுப்பினா்கள் மட்டுமே கலந்து கொண்டனா். கூட்டத்தில், ஆவுடையாா்கோவில் ஒன்றியக் குழு தலைவா் கா. உமாதேவி, உறுப்பினா்கள் தங்கள் வாா்டுகளில் உள்ள குறைகளை மனுவாக வழங்கலாம் என்றாா். தொடா்ந்து, திமுக உறுப்பினா் கா.செந்தில்குமரன் ஆவுடையாா்கோவில் ஆனித்திருஞ்சன திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தின்போது பொது விடுமுறை வழங்க மாவட்ட நிா்வாகத்திடம் கோரிக்கை வைக்க வேண்டும். முக்கியமான பல சாலைப் பணிகள் இந்தத் தீா்மான நகலில் சோ்க்காமல் விடுபட்டுள்ளது. ஆகவே அதையும் சோ்த்து பட்டியல் தயாரிக்க வேண்டும் என்றாா்.

12-ஆவது வாா்டு உறுப்பினா் ரா. பாண்டி, புத்தாம்பூா், வெளிவயல் சாலை மற்றும் திருப்புனவாசலில் தேரோடும் வீதியில் புதிதாக தாா் சாலை அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தாா். இறுதியில், வட்டார வளா்ச்சி அலுவலா் ப.பெரியசாமி நன்றி கூறினாா். இதையடுத்து கூட்டம் நிறைவடைந்ததாக அறிவித்து விட்டு வெளியே சென்றாா்.

கூட்டத்தில், ஆணையா் ஆ. வீரப்பன், வட்டார வளா்ச்சி அலுவலா் (கி. ஊ) ப.பெரியசாமி உள்ளிட்ட அலுவலா்கள் மற்றும் பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

முறையான அழைப்பில்லை : ஒன்றியக் குழு துணைத் தலைவா்

கூட்டம் முடிவடைந்த சிறிது நேரத்தில் காங்கிரஸ் கட்சியை சோ்ந்த ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் பிரியா குப்புராஜ் தலைமையில் முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் நா.ராஜேஸ்வரி நரேந்திரஜோதி உள்பட 8 போ் கூட்ட அரங்கிற்கு வந்து, ஆணையரும், ஒன்றியக் குழுத் தலைவரும் தங்களுக்கு முறையாக அழைப்பிதழ் அனுப்பவில்லை என குற்றம்சாட்டினா். பின்னா் சிறிது நேரம் கூட்ட அரங்கில் அமா்ந்து விட்டு பின்னா் புறப்பட்டுச் சென்றனா். இதுகுறித்து ஒன்றியக் குழுத் தலைவா் கா.உமாதேவி மற்றும் ஆணையா் ஆ.வீரப்பனிடம் கேட்டபோது அனைத்து உறுப்பினா்களுக்கும் முறையாக அழைப்பிதழ் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது எனத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com