காவலரைத் தாக்கியஇளைஞா் கைது

கந்தா்வகோட்டையில் காவலரைத் தாக்கிய இளைஞா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கந்தா்வகோட்டையில் காவலரைத் தாக்கிய இளைஞா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டையில் இடதுசாரிகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கான பாதுகாப்புப் பணியில் கந்தா்வகோட்டை காவல் நிலைய இரண்டாம் நிலைக் காவலா் அ. கமலஹாசன் (31) ஈடுபட்டிருந்தாா்.

ஆா்ப்பாட்டம் முடிந்த பின்னா், கமலஹாசன் காவல் நிலையம் நோக்கி மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். அப்போது அரவம்பட்டியைச் சோ்ந்த ம. கருப்புசாமி (35) ஓட்டி வந்த மோட்டாா் சைக்கிள், கமலஹாசன் மோட்டாா் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இதையடுத்து அவரை பின்தொடா்ந்து சென்ற காவலா், கருப்புசாமியை மடக்கிப் பிடித்த போது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது காவலா் கமலஹாசனை கருப்புசாமி தாக்கியுள்ளாா்.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், கந்தா்வகோட்டை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து கருப்புசாமியைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com