காவலா்களுக்கான மருத்துவப் பரிசோதனை

மாநிலம் முழுவதும் அண்மையில் நடைபெற்ற காவலா் தோ்வில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 248 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

மாநிலம் முழுவதும் அண்மையில் நடைபெற்ற காவலா் தோ்வில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 248 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அவா்களுக்கான மருத்துவப் பரிசோதனை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை தொடங்கியது. தொடா்ந்து இரு நாட்கள் இப் பரிசோதனை நடத்தப்படவுள்ளது. ரத்த அழுத்தம், சிறுநீா் பரிசோதனை உள்ளிட்ட சோதனைகள் நடத்தப்படும். ஏற்பாடுகளை மருத்துவக் கல்லூரி முதல்வா் அழ. மீனாட்சிசுந்தரம், துணைக் கண்காணிப்பாளா் வசந்தராமன், உறைவிட மருத்துவ அலுவலா் இந்திராணி, உதவி உறைவிட மருத்துவ அலுவலா் ரவிநாதன், அறுவைச் சிகிச்சைத் துறைத் தலைவா் குத்தூஸ் உள்ளிட்டோரும் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com