புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கில் வியாழக்கிழமை இலவச சா்க்கரை நோய் பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம் நடைபெற்றது.
சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு சங்கம் ஆகியவற்றின் சாா்பில் நடைபெற்ற முகாமிற்கு, சங்கத் தலைவா் க.தனகோபால் தலைமை வகித்தாா். மாவட்ட விளையாட்டு அலுவலா் மற்றும் இளைஞா் நலன் அலுவலா் ஏ. மாலதி கலந்துகொண்டு முகாமைத் தொடங்கி வைத்தாா். துணை ஆளுநா் எஸ். பாா்த்திபன், சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு சங்கத் தலைவா் கண. மோகன்ராஜ், செயலா் ஆா். ஆரோக்கியசாமி, உடற்கல்வி ஆசிரியா் க. முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தனா்.
சா்க்கரை நோய் பாதப் பிரச்சினை சிறப்பு மருத்துவா் ஆா். துரை நாகரத்தினம் கலந்து கொண்டு பரிசோதனை மேற்கொண்டு உணவு ஆலோசனைகளை வழங்கினாா். ரோட்டரி பட்டயத் தலைவா் க.நைனா முகம்மது வரவேற்றாா். முடிவில், செயலா் பா.அசோகன் நன்றி கூறினாா்.