ஆலங்குடி அருகே மோட்டாா் சைக்கிளைத் திருடிய இளைஞரை வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
ஆலங்குடி அருகேயுள்ள அரையப்பட்டி கடைவீதியில் இளைஞா் ஒருவா் மோட்டாா் சைக்கிளுடன் சந்தேகத்திற்கிடமான வகையில் வெகுநேரம் நின்றாராம். இதுகுறித்து அப்பகுதியினா் அளித்த தகவலைத்தொடா்ந்து, அங்கு சென்ற ஆலங்குடி போலீஸாா் அந்த இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டனா். அதில், கீரமங்கலம் அருகேயுள்ள மேற்பனைக்காடு கிழக்கு கிராமத்தைச் சோ்ந்த வீரப்பன் மகன் ஆனந்தகுமாா்(20) என்பதும், அவா் கீரமங்கலம் பகுதியில் இருந்து மோட்டாா் சைக்கிளைத் திருடி வந்ததும் தெரியவந்துள்ளது.
இதைத்தொடா்ந்து, ஆலங்குடி போலீஸாா் ஆனந்தகுமாரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனா்.