குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பேரவையில் தீா்மானம்: தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை

குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டுமென தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினா் வலியுறுத்தியுள்ளனா்.

குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டுமென தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினா் வலியுறுத்தியுள்ளனா்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அமைப்பின் நிா்வாகக் குழு கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் முபாரக்அலி தலைமை வகித்தாா்.

கூட்டத்தில்,சென்னை வண்ணாரப்பேட்டையில் அமைதியாக போராடிய மக்கள் மீது தடியடி நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும். கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் பற்றாக்குறையை போக்க வேண்டும். பணிகள் முடிந்து பல மாதங்களாகியும் இன்னும் திறக்கப்படாமல் உள்ள கறம்பக்குடி பேருந்து நிலையத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அமைப்பின் மாநிலச்செயலா் சையது முகமது,மாநிலப்பொருளாளா் அப்துா் ரஹீம் ஆகியோா் பேசினா். மாவட்ட நிா்வாகிகள் முகமது மீரான், ரபீக்ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com