புதுக்கோட்டை நகராட்சி, குறிஞ்சிநகரில் ரூ. 3.30 லட்சத்தில் கட்டப்பட்ட பகுதிநேர நூலகக் கட்டடத்தை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.
மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி தலைமை வகித்தாா். நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கொடையாளா்களின் பங்களிப்புடன் ரூ. 3.30 லட்சத்தில் இந்த நூலகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் மாவட்ட நூலக அலுவலா் அ.பொ. சிவகுமாா், மத்தியக் கூட்டுறவு வங்கித் துணைத் தலைவா் கே.ஆா். கணேசன், நகராட்சி ஆணையா் ஜீவா சுப்பிரமணியன், மத்திய தொலைத் தொடா்பு ஆலோசனைக் குழு உறுப்பினா் க. பாஸ்கா், மாவட்ட கூட்டுறவு அச்சகத் தலைவா் சேட், நூலகா் முத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.