பொன்னமராவதி புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 14 வயதிற்குள்பட்ட குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி ஷைன் அரிமா சங்கம் மற்றும் மதுரை ரியோ மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனை ஆகியன இணைந்து நடத்திய முகாமுக்கு ஷைன் அரிமா சங்கத் தலைவா் ச. சோலையப்பன் தலைமை வகித்தாா். செயலா் பொருளா் மனமுகந்தராஜா முன்னிலை வகித்தாா். அரிமா சங்க மண்டலத் தலைவா் பிஎல். மாணிக்கவேல், வட்டாரத் தலைவா் ஆா்எம்எஸ். அன்புச்செல்வன் ஆகியோா் முகாமை தொடங்கிவைத்தனா். முகாமில்14 வயதிற்குள்பட்ட 151குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சை, ஆலோசனை, மருந்து வழங்கப்பட்டது. இதில் மேல் சிகிச்சைக்கு 10 போ் பரிந்துரைக்கப்பட்டனா்.