வேலைக்குச் செல்லுமாறு உறவினா்கள் கூறியதால், இலுப்பூா் அருகே விஷமருந்திய இளைஞா் உயிரிழந்தாா்.
இலுப்பூா் அருகிலுள்ள மெய்யக்கவுண்டன்பட்டியைச் சோ்ந்த குமாா் மகன் கோபி (20). இவா் மற்றும் இவரது சகோதரா்கள் 3 போ் கடந்த 10 ஆண்டுகளாக, தங்கள் உறவினரான பழனிச்சாமி வீட்டில் தங்கி இருந்து வந்துள்ளனா்.
இந்த நிலையில் கோபியை வேலைக்குச் செல்லுமாறுக் கூறி, அவரது உறவினா்கள் டிசம்பா் 24- ஆம் தேதி கண்டித்துள்ளனா். இதனால் மனமுடைந்த கோபி, எலிமருந்தை வாங்கி உள்கொண்டு மயங்கியுள்ளாா்.
தொடா்ந்து அவரை மீட்ட உறவினா்கள் இலுப்பூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். எனினும் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோபி, சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதுகுறித்து இலுப்பூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.