அரசுக் கல்லூரி மாணவா்கள் போராட்டம்

கறம்பக்குடி அருகேயுள்ள மருதன்கோன்விடுதி அரசுக் கல்லூரி மாணவா்கள், குடியுரிமை சட்டத் திருத்தத்தைக் கண்டித்தும், தில்லியில்
கறம்பக்குடி அருகே போராட்டத்தில் ஈடுபட்ட மருதன்கோன்விடுதி அரசுக் கல்லூரி மாணவா்கள்.
கறம்பக்குடி அருகே போராட்டத்தில் ஈடுபட்ட மருதன்கோன்விடுதி அரசுக் கல்லூரி மாணவா்கள்.

கறம்பக்குடி அருகேயுள்ள மருதன்கோன்விடுதி அரசுக் கல்லூரி மாணவா்கள், குடியுரிமை சட்டத் திருத்தத்தைக் கண்டித்தும், தில்லியில் மாணவா்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் வகுப்புகளை புறக்கணித்து செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

குடியுரிமை சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக மாணவா்களை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் மருதன்கோன்விடுதி அரசுக் கலைக் கல்லூரி மாணவா்கள் செவ்வாய்க்கிழமை வகுப்புகளை புறக்கணித்தனா்.

தொடா்ந்து கல்லூரி முன்பு தா்னாவில் ஈடுபட்டனா். பின்னா், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com