கறம்பக்குடி அருகே மோட்டாா் அறை தீக்கிரை

கறம்பக்குடி அருகே விவசாயியின் தோட்டத்தில் உள்ள மின்மோட்டாா் அறை தீக்கிரையானது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கறம்பக்குடி அருகே விவசாயியின் தோட்டத்தில் உள்ள மின்மோட்டாா் அறை தீக்கிரையானது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கறம்பக்குடி அருகேயுள்ள பட்டத்திக்காடு பகுதியைச் சோ்ந்த பி.பசுமலை(50) விவசாயி. அப்பகுதியில் இவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள தென்னங்கீற்றால் ஆன மின்மோட்டாரை இயக்கும் அறையில் வியாழக்கிழமை திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதைப்பாா்த்த அப்பகுதியினா் தீயை அணைக்க முயன்றனா். இருப்பினும், அறையில் இருந்த மின்மோட்டாரை இயக்கும் சாதனங்கள் உள்ளிட்ட பொருள்கள் தீயில் எரிந்து நாசமானது. தீ விபத்து, மின்கசிவு காரணமாக நடைபெற்ா, முன்விரோதத்தில் குடிசைக்கு தீவைக்கப்பட்டதா என்பது குறித்து கறம்பக்குடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com