கந்தா்வகோட்டை அருகே அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் , ஆசிரியா்கள் பொங்கல் விழாவை சனிக்கிழமை கொண்டாடினா்.
கந்தா்வகோட்டை ஒன்றியம் , காட்டுநாவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த விழாவில் வட்டாரக் கல்வி அலுவலா் வெங்கடாசலம் கலந்துகொண்டு மாணவா்களுக்கு பொங்கல் வழங்கி வாழ்த்து தெரிவித்தாா். நிகழ்வில் பள்ளித் தலைமை ஆசிரியா் பா. ராஜாத்தி, ஆசிரியா்கள் ஜெ. பிரதிபா நா்மதா, நா. சுதா்சன், சு. ராஜமாணிக்கம்,சே. கீதா, ஆ. தேவதாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல ஆதனக்கோட்டை அருகிலுள்ள குப்பையன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.