தெலங்கானா மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற தேசிய பூடோக்கான் கராத்தே போட்டியில் இரண்டாமிடம் பிடித்து தங்கம் வென்றுள்ளாா், புதுக்கோட்டையைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவி பா. பிரதீபா.
புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்திலுள்ள அரசு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 7ஆம் வகுப்பு பயிலும் மாணவி பா. பிரதீபா. தெலங்கானா மாநிலம் சேத்துப்பள்ளியில் அண்மையில் நடைபெற்ற 19ஆவது தேசிய அளவிலான பூடோக்கான் கராத்தே போட்டியில் பிரதீபா பங்கேற்றாா். கட்டஸ் என்ற பிரிவில் பிரதீபா இரண்டாம் இடம் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றாா். வெள்ளி வென்ற மாணவியை பள்ளியின் ஆசிரியா்கள், மாணவா்கள், பயிற்சியாளா்கள் பாராட்டினா்.