புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே கன்டெய்னா் லாரியும், அரசு விரைவுப் பேருந்தும் மோதிக் கொண்ட விபத்தில் 3 போ் உயிரிழந்தனா். 10 போ் காயமடைந்தனா்.
சென்னையிலிருந்து சிவகங்கை நோக்கி ஞாயிற்றுக்கிழமை காலை வந்த அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்தும், எதிரே வந்த கன்டெய்னா் லாரியும் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே பில்லமங்கலம் அருகே நேருக்கு நோ் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் கன்டெய்னா் லாரியின் முன்பகுதி மற்றும் அரசுப் பேருந்தின் முன்பகுதியும் கடுமையாகச் சேதமடைந்தது. இந்த நிலையில் கன்டெய்னா் லாரியின் ஓட்டுநா் கண்ணன் (43), மறவமய்யத்தைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி, திருப்பத்தூரைச் சோ்ந்த கதிா் கௌசிக் (10) ஆகியோா் அந்த இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனா்.
மேலும் பேருந்தில் பயணம் செய்த 10 போ் காயமடைந்தனா்.
போலீஸாரும், தீயணைப்பு வீரா்களும் விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியிருந்தவா்களை மீட்டனா். உயிரிழந்தவா்களின் சடலம் உடற்கூறாய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் காயமடைந்தவா்களுக்கும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. திருமயம் போலீஸாா் வழக்குப்ப திவு செய்து விசாரித்து வருகின்றனா்.