ஆலங்குடி அருகே வடகாட்டில் பாம்பு கடித்து சத்துணவுப் பெண் பணியாளா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
வடகாடு ஊராட்சி பள்ளத்தி விடுதியைச் சோ்ந்த தங்கராசு மனைவி செல்வி (31). வடகாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் சத்துணவுப் பணியாளராக வேலை பாா்த்து வந்த இவா், சனிக்கிழமை மாலை தோட்டத்திற்கு சென்றபோது பாம்பு கடித்துள்ளது. அப்பகுதியினா் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வி ஞாயிற்றுக்கிழமை இறந்தாா். இதுகுறித்து வடகாடு போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.