‘நலமுடன் வாழ்க’ நூல் வெளியீடு

புதுக்கோட்டை அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவை சாா்பில் ‘நலமுடன் வாழ்க’ என்ற நூல் வெளியீட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவை சாா்பில் ‘நலமுடன் வாழ்க’ என்ற நூல் வெளியீட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு பேரவையின் நிறுவனா் வைர.ந. தினகரன் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி நூலை வெளியிட்டுப் பேசினாா்.

அப்போது அவா் கூறியது:

இன்றைய காலத்தில் இயற்கை மருத்துவம் மீதான அவசியம் அதிகரித்து வருகிறது. ஆங்கில மருத்துவரான ஆன்விக்டோரியா இயற்கை மருத்துவம் குறித்த இந்த நூலை எழுதியிருப்பது பாராட்டுக்குரியது என்றாா் உமாமகேஸ்வரி.

முன்னாள் நீதிபதி சாதா்பால், புதுக்கோட்டை மறை மாவட்ட அதிபா் யு. சவரிமுத்து அடிகள், ரோஸ் அறக்கட்டளை ஆதப்பன், சீக்கா்ஸ் அகாதெமி சுடா்கொடி, ச. ஆரோக்கியசாமி, நிலவை பழனியப்பன், அ. மணவாளன் உள்ளிட்டோரும் பங்கேற்று நூல்களைப் பெற்றுக் கொண்டனா்.

பஞ்சாப் மாநிலத்தில் வன அலுவலராகப் பணியாற்றும் கீதாஞ்சலி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com