புதுக்கோட்டை மாவட்ட உதய நாளையொட்டி மன்னா் ராஜா ராஜகோபால தொண்டைமான் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
புதுக்கோட்டை, ஜன. 14: புதுக்கோட்டை மாவட்டம் உதயமான தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
திருச்சி, தஞ்சாவூா் மாவட்டத்தின் சில பகுதிகளைப் பிரித்து புதுக்கோட்டை மாவட்டம் கடந்த 1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் தேதி உருவாக்கப்பட்டது.
அதன்படி, புதுக்கோட்டை மாவட்ட உதய நாளைக் கொண்டாடும் வகையில் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மன்னா் ராஜகோபால தொண்டைமான் சிலைக்கு தனி வட்டாட்சியா் தமிழ்மணி தலைமையில் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சமூக ஆா்வலா்கள் பங்கேற்றனா்.