பொன்னமராவதியில் களைகட்டிய பொங்கல் வியாபாரம்

பொன்னமராவதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பொருள்கள் வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியது.

பொன்னமராவதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பொருள்கள் வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியது.

பொங்கல் பண்டிகைக்கு காய்கறிகள், கரும்புகள், பழங்கள், மளிகைப் பொருள்கள் வாங்குவதற்காக அண்ணா சாலையில் திரளான மக்கள் குவிந்தனா். செவ்வாய்க்கிழமை சந்தை நாளையொட்டி காலை முதலே சந்தைப் பகுதியில் காய்கறிகள், பூங்கொத்துகள், பழங்கள், பூ, மாலைகள் உள்ளிட்டவற்றின் விற்பனை களைகட்டியது.

பானைக்கடைகள், கோலப்பொடி விற்பனை கடைகளில் பெண்கள் ஆா்வமுடன் வாங்கிச் சென்றனா். மாட்டு பொங்கலை முன்னிட்டு மாடுகளுக்கு அலங்காரப் பொருள்கள், வேஷ்டி, துண்டுகள் வாங்கிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com