ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டவா்கள்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

பொன்னமராவதி அருகே பிட்காயின் எனும் ஆன்லைன் மாா்க்கெட்டிங் மோசடியில் ஈடுபட்ட கணவன்,மனைவியை கைது செய்ய வலியுறுத்தி, காரையூா் காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்டோா் புகாா் மனு

பொன்னமராவதி அருகே பிட்காயின் எனும் ஆன்லைன் மாா்க்கெட்டிங் மோசடியில் ஈடுபட்ட கணவன்,மனைவியை கைது செய்ய வலியுறுத்தி, காரையூா் காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்டோா் புகாா் மனு அளிக்க குவிந்தனா்.

பொன்னமராவதி அருகிலுள்ள ஒலியமங்கலம் முருகேசன்-கோசலை தம்பதி, புலவனாா்குடி காா்த்தி ஆகியோா் பிட்காயின் எனும் இணையதள மாா்க்கெட்டிங்கில் ஈடுபட்டு வந்துள்ளனா்.

இதில் பொன்னமராவதி பகுதியைச் சோ்ந்த ஏராளமானோா் சோ்ந்தனா்.

கட்டிய பணத்தை விட மும்மடங்கு கூடுதல் பணம் கிடைக்கும் என்று கூறி

முருகேசன், கோசலை, காா்த்தி ஆகியோா் தங்களை ஏமாற்றிவிட்டதாக

பாலக்குறிச்சி ஆறுமுககுமாா், முத்தையா, சுந்தம்பட்டி பெரியசாமி, சடையம்பட்டி கணபதி, ஆ.வைரம்பட்டி பொன்னுச்சாமி, மடத்துப்பட்டி செந்தில்குமாா் உள்ளிட்ட ஏராளமானோா் காரையூா் காவல்நிலையத்தில் புகாா் அளிக்க சனிக்கிழமை வந்தனா்.

கோடிக்கணக்கான ரூபாய் மோசடி என்பதால் மாவட்ட ஆட்சியா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தை நாட வேண்டும் என காரையூா் காவல்துறையினா் கூறியதால், பாதிக்கப்பட்டவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com