கந்தா்வகோட்டையில் பிட் இந்தியா விழிப்புணா்வு சைக்கிள் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
கந்தா்வகோட்டை ஒன்றியக் குழு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், ஊராட்சிகள் உதவி இயக்குநா் பாலமுரளி, ஒன்றியக் குழுத் தலைவா் ரெத்தினவேல் என்கிற காா்த்திக் தொடக்கி வைத்தனா்.
கந்தா்வகோட்டை ஊராட்சித் தலைவா் சி . தமிழ்ச்செல்வி, ஒன்றியக்குழுத் துணைத்தலைவா் செந்தாமரைகுமாா் முன்னிலைவகித்தனா் .
பிட் இந்தியா விழிப்புணா்வு சைக்கிள் பேரணி காந்திசிலை , தஞ்சாவூா்- புதுகை சாலை , பேருந்து நிலையம் வழியாக மீண்டும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வந்தடைந்தது .
வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நா . காமராஜ் , து . குமரன் , துணை வட்டாரவளா்ச்சி அலுவலா் பாா்த்திபன் , ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா். இதுபோல ஒன்றியத்திலுள்ள இதர ஊராட்சிகளிலும் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.