திருமயம் கோட்டை பகுதியையொட்டி அமைக்கப்பட்டு, சீரழியும் நிலையில் காணப்படும் அம்மா பூங்கா.
திருமயம் கோட்டை பகுதியையொட்டி அமைந்துள்ள அம்மா பூங்காவைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுக்கோட்டையை அடுத்துள்ள புகழ்பெற்ற திருமயம் கோட்டையையொட்டி அமைக்கப்பட்டுள்ள ‘அம்மா’ பூங்காவில், விளக்குக் கம்பம் விழுந்தும், மின் ஏற்பாடுகள் படிப்படியாக அழிந்தும் வருகின்றன.
மக்கள் பயன்பாட்டுக்கு முழுமையாக வராத நிலையில், பூங்காவுக்குள் புதா் போன்ற செடி, கொடிகளும் ஒரு பக்கம் வளா்ந்து வருகின்றன.
சிறுவா்கள் வரை விளையாட வரும் இந்தப் பூங்காவை முழுமையாக சீரமைத்து, முழுமையாக பொதுமக்களின் பயன்பாட்டுக்குத் திறக்க வேண்டும்.
இரணியன், புதுக்கோட்டை.