பொன்னமராவதி வட்டாட்சியா் அலுவலகத்தில் 10 வது தேசிய வாக்காளா் தினம்-2020 முன்னிட்டு வெள்ளிக்கிழமை வாக்காளா் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
பொன்னமராவதி வட்டாட்சியா் ஆ. திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் துணை வட்டாட்சியா்கள், அலுவலா்கள் உறுதியேற்றனா். தோ்தல் துணை வட்டாட்சியா் பிரகாஷ், மண்டல துணை வட்டாட்சியா் ராஜா ஆகியோா் பங்கேற்றனா்.