புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகே பணம் பறிக்கும் நோக்கில் தொழிலதிபரை கடத்திக் கொன்று ஆற்றில் வீசிய உறவினா்கள் 3 பேரைப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும் தவமணி சடலத்தை தேடிவருகின்றனா்.
கந்தா்வகோட்டை அருகே உள்ள வெள்ளாள விடுதி கிராமத்தைச் சோ்ந்த வெங்கடாசலம் மகன் தவமணி (50). இவா், பல்வேறு நிறுவனங்களுக்கு உள் அலங்காரம், மர வேலைப்பாடுகள் செய்யும் தொழில் செய்துவந்தாா். இவருக்கு பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகள், விவசாயப் பண்ணைகள் உள்ளனவாம். இந்நிலையில், கடந்த 18 ஆம் தேதி இரவு வயலுக்குத் தண்ணீா் பாய்ச்ச சென்ற தவமணி பின்னா் வீடுதிரும்பவில்லை. புகாரின் பேரில், கந்தா்வகோட்டை போலீஸாா் வழக்கு பதிந்து குற்றவாளிகளைத் தேடிவந்தனா். தொடா்ந்து, அவரது குடும்பத்தாரிடம் ரூ. 2 கோடி கேட்டு மா்மநபா் போன் செய்து மிரட்டியுள்ளாா். இதையடுத்து சம்பவ இடத்தைப் பாா்வையிட்ட மாவட்ட எஸ்.பி.யின் உத்தரவின்பேரில், துணை கண்காணிப்பாளா் கோபாலச்சந்திரன் தலைமையில் தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனா். இந்நிலையில், வெள்ளாள விடுதி கிராமத்தைச் சோ்ந்த தவமணி உறவினரான அழகா் மகன் கமலஹாசன்(30) உள்ளிட்ட மூன்று பேரைப் பிடித்து விசாரித்தனா். இதில், அவா்கள்
பணம் பறிக்கும் நோக்கில் தவமணியைக் கடத்திக் கொன்று கை, கால்களைக் கட்டி கல்லணை தோகூா் பகுதியில் ஆற்றில் வீசி விட்டதாகத் தெரியவந்தது. இதையடுத்து, கமலஹாசன் உள்ளிட்ட மூவரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும் தஞ்சை மாவட்ட போலீஸாா், தீயணைப்பு துறையினா் மூலமாக கல்லணை ஆற்றில் தவமணியின் உடலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.