மின்கட்டணக் கணக்கீட்டு முறையை எளிதாக்கக் கோரி மின்வாரிய அலுவலகத்தில் சிறார் வாய்ப்பாடு சொல்லித்தந்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மின் கட்டணக் கணக்கீட்டில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வரும் நிலையில் புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை இந்தப் போராட்டம் நடைபெற்றது.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்டச் செயலர் எஸ். நியாஸ் அகமது தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் மாவட்டச் செயலர் அருண்மொழி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
குடைகளுடன் வந்த சிறுமிகள் மின்வாரிய அலுவலக வளாகத்தில் சப்தம்போட்டு வாய்ப்பாடு சொல்லிக் கொடுத்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.